Tuesday, January 11, 2011

குஜராத்தின் மருமகள்




நாடாளுமன்றத்திலும், வெளியிலும் 2ஜி ஸ்பெக்ட்ராம் ஊழல் பற்றி பெரும் குரல் எழுப்புகின்றது, பாஜக. ஆனால், நன்றாகக் கவனித்துப் பார்த்தால் நீரா ராடியா டேப் பற்றி வாயே திறப்பதில்லை. ஏன்?

பதில் அந்த டேப்புகளிலேயே இருக்கின்றது. அவருக்கு முதன்முதலில் பழக்கமான இந்திய அரசியல்வாதி பாஜகவின் மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்த்குமார் தான். சற்று பின்னோக்கி போவோம்.

கென்யாவில் வாழ்ந்து கொண்டிருந்த பஞ்சாபி பெற்றோருக்குப் பிறந்தவர் நீரா ராடியா. அவரது தந்தை சர்மா விமான உப கரணங்கள் விற்பனையாளர். 1970களில் அவர் லண்டனுக்குக் குடிபெயர்கின்றார். லண்டனில் இளங்கலை பட்டம் பெற்ற ராடியா அங்கு நிதி வர்த்தகம் செய்து வந்த ஜனக் ராடியா என்கிற குஜராத்தியை மணம் முடிக்கின்றார். அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள். பின்னர் 1995ல் விவகாரத்து ஆகின்றது. அப்போது தான் அவர் இந்தியாவிற்குக் குடிபெயர்கின்றார்.

இந்தியாவில் பல்வேறு விமான சேவை நிறுவனங்களில் பிரதிநிதியாக, அவற்றின் மக்கள் தொடர்பைக் கவனித்துக் கொள்பவராகச்செயல்பட்டார். சகாரா, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், யுகே ஏர், கேஎல்எம் எனப்படும் கொரிய விமான நிறுவனம் ஆகியவை. ஏர்பஸ் என்கிற விமான தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஆலோசகராக ஆகின்றார்.

பின்னர் இரண்டு முறை சொந்தமாக விமான சேவை நிறுவனம் துவங்க முயற்சி செய்து தோல்வியடைந்தார். 2000மாவது ஆண்டு முதலில் துவங்க நினைத்த நிறுவனத்தின் பெயர் கிரவுன் எக்ஸ்பிரஸ். முதலீடு 100 கோடி. (சிங்கப் பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பினாமி நிறுவனம்). மீண்டும் 2005ம் ஆண்டு மேஜிக் ஏர் என்கிற விமான சேவை நிறு வனத்தைத் துவங்க முயற்சித்தார். அது வும் தோல்வியடைந்தது. இரண்டுக்குமே முக்கியமான காரணம் அவரிடம் இந்தியக் கடவுச் சீட்டு இல்லை என்பதும், அந்த வகையில் அவர் பிரிட்டன் குடிமகள் என் பதும்தான். உள்நாட்டு விமான சேவை யில் அந்நிய நிறுவனங்களை அனுமதிப்ப தில்லை என்பது இன்று வரையிலும் அரசின் கொள்கையாக இருந்து வருகின்றது. இந்தக் கொள்கை அப்படியே மாறாமல் இருப்பதற்கு இந்திய விமான சேவை நிறுவன முதலாளிகள் நரேஷ் கோயல், விஜய் மல்லையா போன்றோர் காரணம். அதனால்தான் டாடா சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் கூட்டாகத் துவக்க விரும்பிய விமான நிறுவனத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை.

இதற்கிடையே, நிரா ராடியா 2001ல் வைஷ்ணவி கம்யூனிகேசன்ஸ் என்கிற ஆலோசனை நிறுவனத்தைத் தொடங்குகின்றார். நோயசிஸ், விக்டோம், நியோகாம் ஆகிய நிறுவனங்களையும் பின்னர் துவக்குகின்றார். டாடா குழுமத்தின் 90 நிறுவனங்களுக் கும் மக்கள் தொடர்பு சேவைகள் வழங் கும் உரிமையைப் பெறுகின்றார். பின்னர் முகேஷ் அம்பானியின் ரிலையன்சும் அவரது வாடிக்கையாளர் பட்டியலில் சேருகின்றது.

அவர் 1998-99களில் விமான சேவை நிறுவனங்களின் ஆலோசகர் என்கிற வகையில் அவருக்கு அப்போதைய விமான போக்குவரத்துத் துறை மத்திய அமைச்சர் அனந்தகுமாருடன் பரிச்சயம் ஏற்படுகின்றது. நெருங்கிய நண்பராகின்றார். இதைப் பயன்படுத்தி அவர் அதிகார வட்டாரங்களில் செல்வாக்கு மிக்கவராக தன்னை வளர்த்துக் கொள்கின்றார். அவர் மூலம் கர்நாடகாவின் செல்வாக்கு மிக்க மடாதிபதிகளில் ஒருவரான பெஜாவர் மடாதிபதியுடன் அறிமுகம் ஏற்படுகின் றது. 2003ம் ஆண்டு ‘தவறான கட்சியில் இருக்கும் நல்லவர்’ வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவர் பெஜாவர் மடாதிபதி யைச் சந்திக்கிறார். அப்போது வாஜ்பாயு டன் நீரா ராடியாவும் இருக்கும் புகைப்ப டம் ஒன்றை அப்போதே ‘லங்கேஷ் பத் திரிகா’ எனப்படும் கன்னட இதழ் வெளி யிட்டது. மேற்குறிப்பிட்ட விவரங்களுடன் அதை அவுட்லுக் இதழ் (டிசம்பர் 6, 2010) மறுபிரசுரம் செய்துள்ளது.

வாஜ்பாயின் வளர்ப்பு மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யாவும் ராடியாவின் நண் பர். முகேஷ் அம்பானியின் சார்பாக அவர் ராடியாவுடன் பேசும் தொலைபேசி உரையாடலும் வருமானவரித்துறையின் அம லாக்கப் பிரிவால் பதிவு செய்யப்பட்டுள்ளது. யார் அமைச்சராகலாம், கூடாது என் பது குறித்த இந்த உரையாடலின் ஒரு சிறு பகுதியை மட்டும் இங்கு தரு கின்றோம்.

‘ரஞ்சன்: ஆக, முகேஷ் மகிழ்ச்சியாக இருக்கின்றார்?

ராடியா: மிகவும் மகிழ்ச்சியாக இருக் கின்றார்.

ரஞ்சன்: (சிரிக்கின்றார்) அவர் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா?

ராடியா: என்ன?

ரஞ்சன்: அவர் தன்னுடைய வழக்க மான பாணியில் சொன்னார்... நீங்கள் எப் படி இருக்கிறீர்கள் என்றார்... என்னை விடுங்கள்... நீங்கள் எப்படி இருக் கிறீர்கள் என்று நான் கேட்டேன்..

ராடியா: ம்..ம்..

ரஞ்சன்: ஓகே என்றார்..எப்போதாவது கொஞ்சம் உணர்ச்சியை வெளிப் படுத்துங்கள் என்றேன்... உங்கள் வேலை எல்லாம் செய்தாகிவிட்டது என்றேன்..

ராடியா: ம்ம்..ம்ம்.

ரஞ்சன்: ...ரஞ்சன் நீங்கள் சொன்னது சரி. காங்கிரஸ் இப்போது நமது கடை என்று முகேஷ் கூறினார்.

ராடியா: (சிரிக்கின்றார்)

(ஆதாரம்: ஓபன் ஆங்கில வார இதழ், நவம்பர்20, 2010).

அம்பானி சகோதரர்களுக்கு இடை யில் இயற்கை எரிவாயு உரிமம் குறித்து நடந்த சண்டை குறித்து நாடாளுமன்றம் விவாதித்ததும், அந்த விவாதத்தில் பாஜக சார்பாக முதலில் அருண்ஷோரி பேசுவதாக இருந்ததும், அவர் பேசினால் அனில் அம்பானிக்குச் சாதகமாகப் பேசி விடுவார் என்பதனால், முகேஷ் அம் பானியின் ஆலோசகராக இருந்த ராடியா பாஜக கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் என்.கே.சிங் மூலமாக அப்போது பாஜக தலைவராக இருந்த வெங்கய்யா நாயுடு விவாதத்தைத் துவக் குவதாக மாற்றியது குறித்து ஷோரி வெளிப்படையாகப் புலம்புவதும் நாட றிந்த கதை.

இத்தோடு முடியவில்லை, ராடியா வின் பாஜக தொடர்பு. எந்த பாஜக தலை வரை பீகாரில் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று ஐக்கிய ஜனதாதளம் சொன்னதோ அந்த நரேந்திர மோடிக்கும் அவருக்கும் கூட தொடர்பு இருக்கின்றது.

“டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் அகமதாபாத் பதிப்பு சிறப்பாசிரியராக அந் நாளில் இருந்த கிங்சுக் நாக் தன்னுடைய வலைதளத்தில் அந்நாட்கள் குறித்த நம்முடைய நினைவுகளைக் கிளறிவிடு கின்றார். மோடி விஷயத்தில் இணக்க மாக நடந்து கொள்ளுமாறு ராடியா தன்னிடம் இரண்டு முறை கேட்டுக் கொண்டதாக நாக் எழுதுகின்றார். உங் களைப் போன்ற ஆட்கள் நரேந்திர மோடிக்கு வாழ்க்கையை நரகமாக்கிவிட் டீர்கள். நீங்கள் ஏன் அவரையும், அவரது கொள்கைகளையும் புரிந்து கொள்கிறவர் களாக இருக்கக் கூடாது? என்று ராடியா கேட்டதாக தன்னுடைய கட்டுரையில் மேற்கோள் காட்டுகின்றார். மோடி உங் களது வாடிக்கையாளராக ஆகிவிட்டாரா என்று நாக் அவரிடம் கேட்ட போது, குஜராத்தின் மருமகள் என்கிற வகையில் மட்டுமே அம்மாநிலத்தின் விஷயத்தில் தனக்கு பொறுப்பு இருப்பதாக ராடியா கூறியிருக்கின்றார்.

“வேறு ஒருவர் மூலமாக ராடியா மோடிக்கு அறிமுகப்படுத்தப்பட்டது போல் தெரிகின்றது. வெகுவிரைவிலேயே குஜராத் முதலமைச்சருடன் தன்னு டைய நட்பைப் பலப்படுத்திக் கொண் டார் ராடியா. டாடா மோட்டார்ஸ் தன்னு டைய நானோ தொழிற்சாலையை குஜ ராத்திற்கு மாற்றியபோது அது பலன ளித்திருக்கும். பஞ்சாப், மகாராஷ்டிரா, ஒரிசா, ஆந்திரப் பிரதேசம், ஹரியானா ஆகிய ஐந்து மாநிலங்கள் அந்த தொழிற் சாலைக்காக போட்டியிட்டுக் கொண்டி ருக்கும்போது திடீரென்று குஜராத்திற்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஐதராபாத் பதிப்பின் சிறப்பாசிரியராக இருக்கும் நாக் ‘டாடாவிற்கு நிலம் கிடைத்த வேகம்... மோடிக்கு முன்னரேயே தெரிந்திருக்கும் வாய்ப்பு இருக்கின்றது. புத்திசாலி என்கிற வனையில் அவர் நிலத்தைத் தயாராக வைத்திருந்திருக்கக் கூடும்’ என்று அவுட்லுக்கிடம் கூறினார்.” (டிசம்பர் 6, 2010).

இவ்வளவு பழக்கம் இருந்தும் ‘உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக் கின்றதே’ என்று கூட பாஜக ராடியா பற்றி வாய் திறக்க மாட்டேன் என்கிறதே, அது கவனிக்கப்பட வேண்டியது.(நன்றி;தீக்கதிர் மற்றும் 'மாற்று')

No comments:

Post a Comment