Tuesday, January 11, 2011

விஸ்வரூபம் எடுக்கும் டேப் விவகாரம்


பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் உள்நாட்டு விமான சேவை துவங்க நினைத்ததாகவும், மத்திய அமைச்சர் ரூ.15 கோடி லஞ்சம் கேட்ட தால், லஞ்சம் கொடுத்தால் அவமானம் என்று கருதி அந்த தொழில் துவங்கும் எண்ணத்தையே கைவிட்டு விட்டதாக வும் ரத்தன் டாடா கூறியிருக்கின்றார். டாடா இத்தனை நாளாக சொல்லா மல் இருந்துவிட்டு இப்போது ஏன் சொல்ல வேண்டும்? தொகையை எண் ணால் எழுதி முடிப்பதற்குள் ஒரு நாளே கழிந்துவிடும் அளவிற்கு மிகப் பெரிய ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழல் நாட்டை யும் நாடாளுமன்றத்தையும் உலுக்கி, ராசாவை அமைச்சர் பதவி இழக்க வைத்த நேரத்தில் இதைப் பேசியிருக் கின்றார். அதற்கும் இதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கின்றதா என்கிற ஐயம் இயல்பாகவே எழுகின்றது. கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்த லுக்குப் பின்னர் ஐ.மு.கூட்டணி அமைச் சரவை மீண்டும் அமைந்தபோது அதில் மீண்டும் ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக வந்ததில் ரத்தன் டாடா விற்கும், முகேஷ் அம்பானிக்கும் முக்கிய பங்கு இருக்கின்றது. அவர்களுடன் அதிகார தரகரான நீரா ராடியா என்கிற பெண்மணிக்கும் பங்கிருக்கின்றது. இந்த விஷயம் கடந்த மே மாதம் பயோனிர் மற்றும் அவுட்லுக் ஆகிய பத்திரிகை களால் அம்பலப்படுத்தப்பட்டது. (கிரிஷ் நிகாம் இணையதளம்.இன்டியாஸ் ரிப் போர்ட்.காம்). டாடா, அம்பானி இருவருக்குமே தயா நிதி மாறன் மீண்டும் தொலைத் தொடர் புத் துறையின் அமைச்சராக வருவதில் விருப்பமில்லை. மூட்டைப் பூச்சி போல் குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருப்பார் என்று கருதினார்களாம். அதா வது, காசு ரொம்பக் கேட்பார் அல்லது பங்கே கேட்பார் என்று நினைத்திருக் கலாம். ஏற்கனவே அவர் அப்படி கேட்ட தாக டாடா முன்னர் ஒரு முறை குற்றம் சாட்டியிருக்கின்றார். இருக்கும். ஏனெ னில், தென்னாட்டு பெரு முதலாளிகளில் ஒருவர் கலாநிதி மாறன். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் வெளி யானதிலிருந்தே அது பற்றி மத்திய புல னாய்வுத் துறை விசாரித்து வருகின்றது. அதற்காக அதிகார தரகரான நீரா ராடியா வின் தொலைபேசி ஒட்டு கேட்கப் பட்டது. இது குறித்து மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட சிபிஐ-ன் ரகசிய ஆவ ணம் என்ன கூறுகின்றது என்பதைப் பார்ப்போம். * “ராடியா, தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவிற்கு நெருக்கமான வர். பின்வரும் நிறுவனங்களுக்கு உரிம மும், அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற்றுத் தருவதிலும் காரணகர்த்தாவாக இருந்தவர். அ) ஸ்வான் டெலிகாம் ஆ) ஏர்செல் இ) யுனிடெக் வயர்லெஸ். ஈ) டேடாகாம் (சுருக்கமாக: இவற்றில் டேடா காம் நிறுவனத்திற்கு முகேஷ் அம்பானி யின் நிதியுதவி இருக்கின்றது. அந்நிறு வனத்தில் பணிபுரியும் மனோஜ் மோடி என்பவர் திருமதி ராடியாவுடன் அடிக்கடி தொடர்பு வைத்துக் கொண்டிருந்தார். அதே போல் ஸ்வான் என்கிற நிறுவனத் திற்கு உரிமம் மற்றும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ராடியா எடுத்த முயற்சி களின் காரணமாக ராசா அந்நிறுவனத் திற்குச் சாதகமாக நடந்து கொண்டார். அந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் 200 கோடி டாலர். அதாவது, 10000 கோடி ரூபாய். துபாயின் எமிரேட்ஸ் டெலிகம் யூனிகேஷன்ஸ் என்கிற நிறுவனத்திற்கு 45 விழுக்காடு பங்குகள் இருக்கும் இந்த நிறுவனத்தில் ஆ.ராசா, திருமதி ராடியா ஆகியோருக்கும் பங்கு இருக்கின்றது என்று இந்த ரகசிய அறிக்கை கூறுகின் றது. யுனிடெக் நிறுவனத்திற்கு டாடா ரூ.250 கோடி கொடுத்திருக்கின்றார்)* ராடியாவிற்கும் ரத்தன் டாடாவிற் கும் இடையில் நீண்ட உரையாடல் நடந் திருக்கின்றது. தொலை தொடர்புத் துறை யின் அமைச்சராக தயாநிதி மாறன் வரு வதை எப்படியேனும் தடுக்க வேண்டும் என்று டாடா விரும்புகின்றார் என்பதை அந்த உரையாடல் நிரூபிக்கின்றது. மேக் சிஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அப் பல்லோ ஆகிய நிறுவனங்களின் மூலம் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை டாடா கட்டுப்படுத்துகின்றார் என்பது தெளிவு.* வோல்டாஸ் நிறுவனம் மூலம் ராடியாவுடனும், ராசாத்தி அம்மாளின் ஆடிட்டர் (சிஏ என்கிற ஆங்கிலச் சொல் லுக்கு சார்ட்டட் அக்கவுண்டன்ட் என்று தானே பொருள்?) ரத்தினத்துடனும் தொடர்பு வைத்திருந்தார். மாறனை தொலை தொடர்பு அமைச்சராக ஆக்கா மல் இருப்பதற்கு கருணாநிதி குடும்பத் திற்கு லஞ்சமாக அவர்கள் ‘டிரில்’ என்கிற நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நிலத்தில் ஒரு கட்டிடம் கட்டப் போகின்றார்கள் என்பது தெளிவு. * ராடியா மற்றும் கனிமொழி ஆகியோ ரின் சார்பாக திமுக எம்பிக்களுக்கான அமைச்சர் பதவிக்காக, குறிப்பாக ராசா அமைச்சராவதற்காக, பர்கா தத்தும் (எந்த பயமும் இல்லாமல் துணிச்சலாக செய்தி களைச் சொல்பவர் என்று கருதப்படும் அதே என்டிடிவி பர்காதான்) வீர் சிங்வி யும் காங்கிரசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். * ஏற்கனவே குறிப்பிட்டபடி ராசாத்தி அம்மாளின் ஆடிட்டர் ரத்தினம், கனி மொழி, மற்றும் ஆ.ராசா ஆகியோருக்கு ராடியா நெருக்கமானவர். ஸ்வான் நிறு வனத்தில் தங்களது பொது முதலீடு பற்றி யும் இதர விஷயங்கள் பற்றியும் பேசு வதற்காக அவர் ஆ.ராசாவைச் சந்திக்க விருக்கின்றார். ’’இப்போது நாம் கூற வருவது மிகவும் எளிமையானது. மாறன் மந்திரியாகக் கூடாது என்பதற்காக டாடாவும், முகேஷ் அம்பானியும் ராசாவை மந்திரியாக்கி இருக்கின்றனர். அதன் மூலம் தங்களது நேரடி மற்றும் மறைமுக நிறுவனங்களுக்கு உரிமமும், அலைக்கற்றையும் பெற்றிருக் கின்றனர். அதன் மூலம் ஆயிரக்கணக் கான கோடி ரூபாய்கள் சுருட்டியிருக்கின் றனர். மற்ற பல முதலாளிகளும் போட்டி யில் இருக்கும்போது ராசா இதை சும்மா செய்திருப்பாரா? சும்மா செய்திருந்தால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஓட் டுக்கு நோட்டுக்கட்டு, வேட்டி சேலை என்றும், வ (அதான் சார் குவார்ட்டர் கட்டிங்) என்றும், இன்னபிறவாகவும் அள்ளி இறைத்தார்களே அது எப்படி? டாடாவும் அம்பானியும் கொடுத்த லஞ்சம் எவ்வளவு? ஏனெனில், மாறன் மீண்டும் அமைச் சராக ஆக வேண்டும் என்று மற்றொரு பெரு முதலாளியான சுனில் மிட்டல் விரும்பி யிருக்கின்றார். அதற்கு என்ன காரணம்? * “பாரதி ஏர்டெல்லின் சுனில் மிட் டல் ராசா தொலை தொடர்புத் துறை அமைச்சராவதைத் தடுக்க முயன்றதற்கு அடிப்படையாக மூன்று காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, அலைக் கற்றை ஒதுக்கீட்டில் சிடிஎம்ஏ (சிம் கார்ட் இல்லாத செல்போன் சேவை) சேவையா ளர்களுக்குச் சாதகமாக நடந்து கொண் டதில் ஜிஎஸ்எம் (சிம் கார்ட் செல் சேவை) சேவையாளர்கள் பாதிக்கப்பட்டி ருந்தனர். இரண்டாவதாக, சுனில் மிட் டல், தயாநிதி மாறனுக்கு ஆதரவாக முயற்சிகள் மேற்கொண்டார். பாரதி ஏர் டெல் நிறுவனத்தில் வோடாபோன் நிறு வனம் பங்குகள் வாங்கியதில் சில முறை கேடுகள் நடந்திருப்பதாகத் தெரிகின்றது. அது குறித்து தனியாக அறிக்கை கொடுக் கப்பட்டுள்ளது. ராடியாவைத் தொடர்பு கொண்டு சம்பிரதாயமாக அல்லாமல் சாதாரணமான வகையில் (iகேடிசஅயட) தனக் காக காரியங்கள் ஆற்றித் தருமாறு சுனில் மிட்டல் கேட்டிருக்கின்றார். டாடாவின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படாது என் றால் தான் செய்து தருவதாக ராடியா தெரி வித்திருக்கின்றார். ராசாவுடன் வேறுபாடு களைத் தீர்த்துக் கொள்ளவும் தான் உதவு வதாகவும் (கட்டணம் உண்டு) கூறியிருக் கின்றார்.’’ ராடியா, சுனில் மிட்டலுக்கு வேலை பார்ப்பதை விரும்பாத முகேஷ் அம்பானி அதை ராடியாவிடம் தெரிவித்துவிட்டார். ஆதலால், முறைப்படி ஒப்பந்தம் எதுவும் போட்டுக் கொள்ளாமல் ராடியா (நோய ஷிஸ் கன்சல்டன்சி உள்பட அவருக்கு நான்கு சேவை நிறுவனங்கள் இருக்கின் றன) தன்னுடைய சேவையை வழங்க யிருக்கின்றார். ஆக இதன்படி பின்னர் சுனில் மிட்டலுக்கும் ராசாவுக்கும் இடை யில் கசப்புகள் நீக்கப்பட்டுவிட்டன. மிட் டலின் நிறுவனத்திற்கும் பின்னர் சகாயங் கள் செய்யப்பட்டுள்ளன. ராசா அனில் அம்பானியின் நிறுவனத்திற்கும் கூடுதல் சகாயங்களைச் செய்துள்ளார் என்பது தனி விஷயம். தான் வலிந்து அமைச்சராக்கிய ஒரு வர் தனக்காக செய்த ஊழல் அம்பலமாகி, தன் பெயர் நாறிவிடுமோ என்கிற பயத் தில் (?) டாடா நல்ல பிள்ளை போல் பேசு கின்றார்.
நன்றி;தீக்கதிர், 21.11.10

No comments:

Post a Comment